மனைவி மற்றும் அவரது காதலனை கொலை செய்த வாலிபர் கைது

டெல்லியில் மனைவி மற்றும் அவரது காதலனை கொன்ற வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். இரட்டைக் கொலை நடந்த 6 மணி நேரத்தில் இந்த வழக்கு நிரூபிக்கப்பட்டதாக டெல்லி போலீஸார் கூறினர்.

டிசம்பர் 30-ம் தேதி, சப்தர்ஜங் மருத்துவமனையின் இரண்டாவது கேட் முன் ஒரு இளம் பெண்ணும் ஒரு இளைஞனும் பலத்த காயங்களுடன் கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அவர்கள்  உடனடியாக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

அந்தப் பெண்ணின் முகத்தில் பெரிய வெட்டுக்காயம் இருந்தது.அந்த இளம்பெண் சன்னி கந்தர்வ் என்பவரை கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இருவரும் நொய்டாவில் உள்ள மருத்துவமனையில் பணிபுரிந்தனர். இதற்கிடையில், இளம் பெண் தனது கணவரின் பால்ய நண்பரான சாகர் என்பவருடன் தகாத உறவில் இருந்ததாகவும், இதை தெரிந்துகொண்ட பெண்ணின் கணவர்,  உறவை இருவரையும் பலமுறை எச்சரித்துள்ளார்.

ஆனாலும் மீண்டும் உறவு நீடித்ததால், இருவரையும் கத்தியால் குத்தி கொன்றதாக போலீசார் கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *