
வெள்ளிப் பட்டறை உரிமையாளரிடம் நகை, பணம் பறிப்பு – 2 பேர் கைது
சேலம் மணியனூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (42). வெள்ளிப்பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இவர் கடந்த 12- ந் தேதி மாலை சீலநாயக்கன்பட்டி பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சில நபர்கள், ராஜேந்திரனை வழி மறித்து, கத்தியை காட்டி மிரட்டி அவரை தாக்கி அவரிடமிருந்து 1 பவுன் செயின், ரூ.500 ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர். இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி வழக்குப் பதிவு செய்து வழிப்பறி யில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த ஜீவானந்தம் (19), கவியரசன் (25) ஆகிய இருவரையும் நேற்று கைது செய்தனர். மேலும் தலைமறை வாக உள்ள அவர்களின் கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.