
வாலாஜா அருகே பெண் தற்கொலை
வாலாஜாவை அடுத்த அனந்தலை பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி கீதா (48). இவர் துணி வியாபாரம் செய்து வந்தார். அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்துள்ளது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வாலாஜா போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.