
வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் : இந்தியா நிதான ஆட்டம்
வங்காள தேசம் – இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியின் கேஎல் ராகுல் – சுப்மன் கில் ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கியது.
இதில் 20 ரன்னில் சுப்மன் கில்லும் 22 ரன்னில் ராகுல் வெளியேற அடுத்து வந்த விராட் கோலி 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய பண்ட் 6 பவுண்டரி 2 சிக்ஸருடன் 46 (45) ரன்களில் அவுட்டானார். இருப்பினும் அவருக்குப் பின் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் நங்கூரமாக நின்று புஜாராவுடன் சேர்ந்து இந்தியாவை வலுப்படுத்தும் முயற்சியில் விளையாடினார்.
நிதானமாக விளையாடிய புஜாரா 90 ரன்னில் அவுட் ஆனார். இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 278 ரன்கள் சேர்த்தது. வங்காள தேசம் அணி தரப்பில் இஸ்லாம் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.