
புளியந்தோப்பில் பிரபல ரவுடி கொலை
சென்னை புளியந்தோப்பை சேர்ந்த பிரபல ரவுடி சுரேஷ் என்பவர் தனது மனைவியை பார்க்க சென்றபோது, 3 பேர் கொண்ட கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி தலை மற்றும் கழுத்தில் சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த சுரேஷ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.