
திருச்சியில் 2 செல்போன் கடையில் கொள்ளை
திருச்சி சங்கிலியாண்டபுரம் மெயின் ரோடு அரச மரத்தடியில் உள்ள நூர் என்பவரது செல்போன் கடையில் பூட்டை உடைத்து ரூ. 4000 பணத்தை திருடி சென்று விட்டனர். அதேபோல் அருகருகே உள்ள இரண்டு செல்போன் கடைகளை உடைத்து கொள்ளையர்கள் செல்போன்களை திருடி சென்றுள்ளனர். இவற்றின் மதிப்பு தெரியவில்லை. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.