
குட்கா ஊழல் வழக்கு: கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய சிபிஐக்கு நீதிமன்றம் அவகாசம்
சென்னை: தமிழகத்தில் கடந்த 2015ம் ஆண்டு புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது.செங்குன்றம் பகுதியில் உள்ள மாதவராவ் என்பவருக்கு சொந்தமான குட்கா கிடங்கில் கடந்த 2016ம் ஆண்டு வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி லஞ்சம் கொடுத்த டைரியை கைப்பற்றினர். இந்த சர்ச்சையில் அப்போதைய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் பெயர்களும் அடிபட்டன.
இந்த வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில், கிடங்கு உரிமையாளர்கள் மாதவராவ், சீனிவாசராவ், உமா சங்கர் குப்தா, உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய சுங்கத் துறை அதிகாரி நவநீதகிருஷ்ண பாண்டியன், சுகாதாரத் துறை அதிகாரி சிவக்குமார் ஆகியோர் கடந்த 2016ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கில் சிபிஐ போலீஸ் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. அதில் கைதான மாதவராவ் உள்பட 6 பெயர்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தன. குற்றப்பத்திரிகையில் அமைச்சர் மற்றும் டிஜிபி யாருடைய பெயரும் குறிப்பிடப்படவில்லை.
இதனிடையே, முன்னாள் அமைச்சர்கள் பி.வி. ரமணா, சி.விஜயபாஸ்கர், முன்னாள் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் மற்றும் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் உள்ளிட்ட 11 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தமிழக அரசு ஜூலை 19ஆம் தேதி அனுமதி அளித்தது. இதையடுத்து இந்த வழக்கு கடந்த முறை சென்னை சிபிஐக்கு மாற்றப்பட்டது. நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன்பு ஆஜரானபோது, சி.பி.ஐ. 11 பேர் மீது கட்சி கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் பல்வேறு தவறுகள் இருந்ததால் சாட்சிகள் விவரம் மற்றும் அவர்களது வாக்குமூலங்களை சேர்த்து அதில் திருத்தம் செய்து தாக்கல் செய்ய விசாரணை அதிகாரிக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இதுவரை 7 பேர் மீது மட்டும் வழக்குப்பதிவு செய்ய மத்திய, மாநில அரசுகளின் அனுமதி கிடைத்துள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது. அதைத்தொடர்ந்து, ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் குற்றப்பத்திரிகையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள தவறுகளை முழுமையாக சரி செய்து, யார் மீது வழக்கு தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணையை ஜனவரி 10ம் தேதிக்கு ஒத்திவைத்தார். யாரை இதற்கிடையில், வழக்குக்கு தொடர்பில்லாத முடக்கப்பட்ட அசையா சொத்துக்களை விடுவிக்குமாறு குற்றம் சாட்டப்பட்டவர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, இந்த வழக்கில் திருத்தப்பட்ட கூடுதல் குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது. தாக்கல் செய்யாத நிலையில் சொத்துக்களை விடுவிக்க முடியாது என்று மறுத்தார்.