
காசி தமிழ் சங்கமம் நாளை நிறைவு : சிறப்பு விருந்தினராக அமித்ஷா
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் கடந்த மாதம் நவம்பர் 17-ந் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி தொடங்கியது. பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உள்ளிட்ட அமைச்சர்கள் இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட திரை பிரபலங்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் இருந்து மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்ட சுமார் 2,500 பேர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், வாரணாசியில் நடைபெற்று வரும் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி நாளை (டிசம்பர் 16) நிறைவு பெறுகிறது. நிறைவு விழாவில் உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் முன்னிலை வகிக்கிறார். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார். இவர்களுடன் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், கிஷண் ரெட்டி, எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.