
ஊத்துக்குளி அருகே வாலிபர் தற்கொலை – போலீசார் விசாரணை
ஊத்துக்குளி பகுதியை சேர்ந்தவர் ஜீவானந்தம். இவர் தினந்தோறும் குடித்து விட்டு தொந்தரவு செய்துள்ளார். இதனை அவரது தங்கை தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட சண்டையில் வீட்டிற்குள் சென்ற ஜீவானந்தம் கம்பியில் தூக்கு மாட்டிக் கொண்டுள்ளார். அவரை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது குறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.