
ஆங்கிலேய-சீக்கியப் போர் ஆரம்பமான நாள் டிசம்பர் 14
1782 – மொண்ட்கோல்பியர் சகோதரர்கள் ஆளில்லா வெப்பக்காற்று பலூனை முதன் முதலில் பிரான்சில் சோதித்தனர். 2 கிமீ உயரம் வரை இது பறந்தது.
1812 – உருசியா மீதான பிரெஞ்சுப் படையெடுப்பு முடிவுக்கு வந்தது.
1814 – பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: பிரித்தானிய அரச கடற்படை லூசியானாவின் புரோக்னி ஆறுப் பகுதியைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.
1819 – அலபாமா அமெரிக்காவின் 22-வது மாநிலமாக இணைந்தது.
1845 – ஆங்கிலேய-சீக்கியப் போர் ஆரம்பமானது