மாணவி மீது ஆசிட் வீசிய கொடூரர்கள் போலீசாரால் கைது..!!

டெல்லி தெற்கு துவாரகா பகுதியில் இன்று காலை 9 மணியளவில் 17 வயது பள்ளி மாணவி தனது சகோதரியுடன் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த இருவர் மாணவி மீது ஆசிட் வீசிவிட்டு தப்பிச் சென்றனர். அவரது முகம் மற்றும் கண்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து மாணவி சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுமி மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக டெல்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆசிட் வீச்சு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் சகோதரியிடம் விசாரணை நடத்தியதில் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இவருடைய சகோதரிக்கு நன்கு அறிமுகமான இருவர் இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சம்பவத்தில் ஆசிட் வீசியவர்கள் யார் என்பது குறித்து காயமடைந்த சிறுமி போலீசாரிடம் தெரிவித்தார். இந்நிலையில் ஆசிட் வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் பயன்படுத்திய பைக்கையும் போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் ஆசிட் ஆர்டர் செய்து ஆன்லைனில் வாங்கியது தெரியவந்தது. அவர்களிடம் ஆசிட் வீச்சுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *