
பெண்ணுக்கு கொலை மிரட்டல் – டிரைவர் கைது
ஊட்டி தலைகுந்தா பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி கவிப்பிரியா (32). இவர் ஊட்டி அரசு மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று கவிப்பிரியா பணி முடிந்து தலைக்குந்தா சென்று கொண்டிருந்தார். அப்போது பஸ்சில் இருந்த டிரைவர் உமருக்கும், கவிப்பிரியாவுக்கும் முன்விரோதம் காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் வாக்குவாதம் முற்றி தகராறாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த உமர் தகாத வார்த்தையால் பேசி கவிப்பிரியாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்த புகாரின் பேரில் புதுமந்து போலீசார் உமர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.