
நின்றுகொண்டே சாப்பிடுவது இவ்வளபு பிரச்சினை தருமா?
தற்போதைய அவரச உலகில் யாரும் சம்மணம் போட்டு உட்கார்ந்து உண்பதே இல்லை. நின்று கொண்டே தங்கள் உணவை அவசர அவசரமாக உண்டு முடித்து விடுகின்றனர். நீங்கள் நின்று கொண்டே உண்பதால் அதிகமாக சாப்பிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. மேலும், இது உங்கள் வயிற்றுப் பகுதியில் வீக்கம் மற்றும் வாயுப் பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஆயுர்வேதத்தின்படி, நீங்கள் உண்ணும் தோரணை செரிமான செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதேபோல் நீர் அருந்தும் போதும் நின்று கொண்டே குடிக்கக்கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது.