
தொடர் மழையால் மீண்டும் தக்காளி விலை உயர்வு..!!
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டு, பழங்கள் வரத்து குறைந்து வருகிறது. இதன் எதிரொலியாக காய்கறிகளின் விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. கிருஷ்ணகிரி மற்றும் ஆந்திரா பகுதிகளில் இருந்து 1,500 பெட்டி தக்காளி மட்டும் ஈரோடு சந்தைக்கு நேற்று விற்பனைக்கு வந்தது. வரத்து குறைந்ததால் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ரூ.10க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ தக்காளி நேற்று ரூ.25க்கு விற்பனையானது.