
கொரோனா பாதிப்பு குறைவு..கோவாவில் குவியும் சுற்றுலா பயணிகள்..!!
கோவா சுற்றுலாவுக்கு பெயர் பெற்ற ஒரு சிறிய மாநிலம். இங்கு உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஈகாவாவில் சுற்றுலாப் பருவம் பொதுவாக நவம்பர் மாதம் தொடங்கி பிப்ரவரி வரை நீடிக்கும். கடந்த 2019 சீசனில் மட்டும் 72 லட்சம் உள்நாட்டு சுற்றுலா பயணிகளும், 9 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வந்துள்ளனர். பின்னர், கொரோனா பரவல் காரணமாக, இந்த எண்ணிக்கை முற்றிலும் குறைந்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் சுற்றுலாவை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி மாநிலத்தில் 2வது சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டது. இதனால், கொரோனாவுக்கு முன்பிருந்ததை போல சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த சீசனில் சுமார் 81 லட்சம் சுற்றுலா பயணிகள் வருவார்கள் என சுற்றுலாத்துறை அமைச்சர் ரோகன் கவுண்டே தெரிவித்தார்.