
கறம்பக்குடி அருகே மாணவன் மாயம் – போலீசார் விசாரணை
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி மகன் நவீன்ஜனா (16). இவர், பாத்திமாநகரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்து அருகில் உள்ள மாஞ்சன்விடுதி அரசு மேல்நிலை பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று பள்ளிக்கு சென்ற நவீன்ஜனா வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அக்கம் பக்கம் மற்றும் நட்பு வட்டாரங்களில் தேடியும் கிடைக்காததால், ஆலங்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவனை தேடி வருகின்றனர்.