
கடையின் பூட்டை உடைத்து ஒன்னரை லட்சம் பணம் கொள்ளை
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் காந்தி ரோட்டில் மளிகை கடை வைத்திருப்பவர் வெங்கடேசன். இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். தொடர்ந்து நேற்று காலையில் கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்துள்ளது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த வெங்கடேசன் கடையை திறந்து உள்ளே சென்று பார்த்த போது ரூ.1½ லட்சத்தை யாரோ மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது. இது குறித்து வெங்கடேசன் ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். விரைந்து வந்த போலீசார் கடையில் ஆய்வு செய்து கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்து கொள்ளை சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.