
கடலூரில் குட்கா விற்ற 13 பேர் கைது
கடலூர் மாவட்டத்தில் 13-ந் தேதி கஞ்சா, லாட்டரி தடைசெய்யப்பட்ட குட்கா, போன்ற சட்ட விரோத செயலில் ஈடுபட்ட 22 குற்றவாளிகளை கைது செய்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் குட்கா விற்பனை செய்த ஜெயபிரகாஷ் (55), புதுச்சத்திரம் பச்சையம்மாள் (70), மந்தாரக்குப்பம் கோபாலகிருஷ்ணன் (42), ஸ்ரீமுஷ்ணம் குமரவேல்(46). பாரதிராஜா(27), சோழதரம் ராஜசேகர்(52). நெல்லிக்குப்பம் செந்தில்நாதன் (40), ஆவினங்குடி மோகன் (64), ராமநத்தம் வெங்கடேசன்(50), வேப்பூர் செல்வராஜ் (48). மணிவேல் (40), சிறுபாக்கம் பழனியப்பன் (55), திட்டக்குடி தமிழ்செல்வன் (55), ஆகிய 13 நபர்கள் மீது வழக்குபதிவு செய்து, இவர்களிடமிருந்து 1 கிலோ 175 கிராம் குட்கா பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.