
உடல்நிலை சரியில்லாத விரக்தியில் பெண் துணி வியாபாரி தற்கொலை
வாலாஜா கணபதி நகரை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவரது கீதா (48). துணி வியாபாரம் செய்து வந்த இவர் சமீப நாட்களா உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் குணமாகவில்லை என்பதால் விரக்தியில் இருந்த கீதா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த வாலாஜா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.