
இந்தியாவில் நிலக்கரி தட்டுப்பாடு இல்லை..மத்திய அரசு தகவல்
இந்த ஆண்டு இந்தியா 17% அதிக நிலக்கரி உற்பத்தி செய்துள்ளதாகவும், தற்போது நாட்டில் நிலக்கரி தட்டுப்பாடு இல்லை என்றும் மத்திய நிலக்கரி, சுரங்கம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். இதற்கு மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்த அவர், 2020-21ல் 716.083 மில்லியன் டன் நிலக்கரியும், 2021-22ல் 778.19 மில்லியன் டன் நிலக்கரியும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். நடப்பு ஆண்டில் நவம்பர் மாதம் வரை 524.2 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த ஆண்டு இதே காலத்தில் 448.1 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும், இது கடந்த ஆண்டை விட 17% அதிகமாகும் என்றும் அவர் கூறினார். நாட்டின் நிலக்கரி தொடர்பான மின் நிலையங்களில் 31 மில்லியன் டன் நிலக்கரி இருப்பதால் நிலக்கரி தட்டுப்பாடு இல்லை என்றும் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியுள்ளார்.