
அமைச்சரான உதயநிதியுடன் இணைந்த மூத்த ஆட்சியர்கள்..!!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 35வது அமைச்சராக சேப்பாக்கம் திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் இன்று பதவியேற்றார். அமைச்சர் மெய்யநாதனிடம் கூடுதலாக இருந்த விளையாட்டு துறை புதிய அமைச்சராக பதவியேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் 3 மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஒன்றிணைந்து செயல்படுவார்கள். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை செயலாளராக அதுல்ய மிஸ்ரா ஐஏஎஸ், சிறப்பு திட்ட அமலாக்கத்துறை செயலாளராக உதயச்சந்திரன் ஐஏஎஸ், வறுமை ஒழிப்பு திட்டம் மற்றும் ஊரக கடன் துறை செயலாளராக அமுதா ஐஏஎஸ். இந்த 3 துறைகளும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், 3 துறைகளின் செயலாளர்களாக உள்ள 3 மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து பணியாற்ற உள்ளனர்.