நடப்பு ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆல்ரவுண்டராக கலக்கி வருபவர் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின். இந்த ஐபிஎல் சீசனில் 3, 4-வது விக்கெட்டுக்கு களமிறங்கி பேட்டிங்-கிலும் அசத்தி வருகிறார். இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் சாதித்து வரும் அஸ்வின் குறித்து பாராட்டி பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறுகையில்,
” அஸ்வின் ஒரு தொடக்க பேட்ஸ்மேனாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். தற்போது அவர் ஒரு சிறந்த சுழற்பந்து வீரர் ஆவார். எந்த வரிசையிலும் தன்னால் சிறப்பாக ஆட முடியும் என்பதை அஸ்வின் நிரூபித்து உள்ளார். அவர் ஐந்து டெஸ்ட் சதங்களைப் அடித்துள்ளார். அந்த பேட்டிங்கை “அல்ட்ரா ஷார்ட் ஃபார்மேட்டில்” செய்து, ஆஸ்திரேலியாவில் நடக்கும் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற முடியும் என்று அஸ்வின் நிரூபித்துள்ளார்.
அதுவே அவரது குறிக்கோள், அதனால்தான் அவர் தனது சொந்த பேட்டிங் செயல்திறனைப் பற்றி மிகவும் உற்சாகமாக இருக்கிறார். ” என கவாஸ்கர் தெரிவித்தார்