தமிழ்நாட்டில் காவிரி, வைகை, குண்டாறு நதிகளை இணைக்கும் திட்டத்தை நேற்று முன்தினம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்திருந்தார். இந்நிலையில், காவிரி நதி நீரை பயன்படுத்தி நதிகள் இணைக்கும் தமிழக அரசின் திட்டத்திற்கு கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்த விவகாரம் குறித்து முன்னாள் முதல்-மந்திரியும், எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா நேற்று தனது டுவிட்டர் பதிவுகளில், தமிழக அரசு, காவிரி நதியில் 45 டி.எம்.சி. தண்ணீரை சட்டவிரோதமாக பயன்படுத்தி கொண்டு நதிகள் இணைப்பு திட்டத்தை தொடங்கி உள்ளது. காவிரி தண்ணீரை சட்டவிரோதமாக பயன்படுத்தி இந்த திட்டத்தை தொடங்கி இருப்பது கண்டிக்கத்தக்கது. இந்த சட்டவிரோதமாக திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும், என்று தமிழக முதல்-அமைச்சரை கேட்டுக் கொள்கிறேன். தமிழக அரசு காவிரி நதி நீரை சட்டவிரோதமாக பயன்படுத்தி நதிகள் இணைக்கும் திட்டத்தை தொடங்கி இருப்பது குறித்து கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா, சுப்ரீம் கோர்ட்டு கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.
