ஆரம்ப நிலை புற்று நோய் உள்ளவர்கள் இந்த ராஜ்மாவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் செல்கள் நம் உடம்பில் அதிகமாகாமல் தடுக்கலாம். இதில் அதிகப்படியான மக்னீசியம் இருக்கிறது. இந்த மக்னீசியம் சத்தானது ஆன்டி-ஆக்ஸிடண்டாக செயல்பட்டு நம் உடலில் உள்ள செல்களை பாதுகாக்கிறது.
மூளையின் நரம்பு மண்டலங்கள் திறமையாக செயல்பட ‘வைட்டமின் கே’ அவசியம். ராஜ்மாவில் வைட்டமின் ‘கே’ அதிக அளவு நிறைந்துள்ளது. ராஜ்மாவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மூளையின் செயல்திறன் அதிகரித்து நினைவாற்றல் அதிகரிக்கும்.
ரத்தசோகை நோய் ஏற்படாமல் தடுக்க இந்த பீன்ஸை அடிக்கடி உபயோகிக்கலாம். இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும், கொலஸ்ட்ராலை குறைக்கும், நீரிழிவு உள்ளவர்கள், இதயநோய் உள்ளவர்கள் என்று எல்லோரும் இதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.