பிரிஸ்பேன்:
ஆஸ்திரேலயாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில், இந்திய அணி அபார வெற்றி பெற்று தொரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த போட்டியின் 2-வது இன்னிங்சில் கடைசி வரை களத்தில் இருந்த இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட், 89 ரன்கள் விளாகி வெற்றிக்கு வித்திட்டார். இதனால் ரிஷப் பண்ட் ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.
ஆட்ட நாயகன் விருதை பெற்ற பிறகு ரிஷப் பண்ட் கூறியதாவது:
என் வாழ்க்கையில் மிகப்பெரிய தருணமாக இந்த வெற்றி இருக்கும். இந்த டெஸ்ட் தொடர் எனக்குக் கனவுத் தொடராக இருந்தது. இந்திய அணி நிர்வாகம் நான் டெஸ்ட் போட்டிக்குள் இடம் பெற்றதும், அணியில் நீ முக்கியமானவர், மேட்ச் வின்னராக இருக்க வேண்டும், உன்னால் போட்டியை வெல்ல வைக்க முடியும் எனத் தொடர்ந்து எனக்கு ஊக்கமளித்து வந்தனர். இந்திய அணியை வெல்ல வைக்க வேண்டும் என ஒவ்வொரு நாளும் சிந்தித்து வந்தேன். அது இன்று நடந்துவிட்டது என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.