ஆஸ்திரேலியா – இந்தியா அணிகளுக்கு இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் இந்தயா 2-1 எனத் தொடரை கைப்பற்றியது. இந் தொடரின் முதல் போட்டியில், இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி காயம் அடைந்தார். இதனால் அவர் மற்ற மூன்று போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் தனது காயத்தின் நிலை குறித்து முகமது ஷமி கூறுகையில்
இந்த வெற்றி, உலகின் எந்தவொரு இடத்திலும் அவர்களது இடத்தில் இந்திய அணியால் வெற்றி பெற முடியும் என்பது நிரூபனம் ஆகியுள்ளது. நான் காயம் அடையும்போது கண்ணீர் விட்டு அழுதேன். அணியில் இருந்து இடையிலேயே வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. நான் நிர்வாகத்ததிற்கு, சப்போர்ட் ஸ்டாஃப்களுக்கு, அனைத்து வீரர்களுக்கும் இந்த வெற்றியை பெற்றதற்கான பெருமையை வழங்கிறேன்’’
‘‘இந்த வெற்றி மிகப்பெரிய சாதனை. இந்திய அணியில் ஏராளமான வீரர்கள் காயம் அடைந்தனர். ரிசர்வ் வீரர்களை வைத்துக்கொண்டு அணியை ரஹானே வழிநடத்தியது பாராட்டுக்குரியதாகும். அறிமுகம் ஆன வீரர்கள் அவர்களுடைய ஆளுமையை வெளிக்காட்டினர்கள். பந்து வீச்சு அல்லது பேட்டிங் எதுவாக இருந்தாலும் சிறப்பாக தங்களை பணியை செய்தார்கள் என தெரிவித்துள்ளார்.