யோகி’, ‘வடசென்னை’ திரைப்படங்களுக்கு அடுத்ததாக இயக்குனர் அமீர் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ‘நாற்காலி’. இருட்டு படத்தின் இயக்குநர் வி.இசட்.துரை இயக்கும் இந்த படத்தில், அமீருடன், ‘555’ திரைப்படத்தின் நாயகி சாந்தினி ஸ்ரீதரன் கதாநாயகியாக நடிக்க, இவர்களுடன் ஆனந்தராஜ், ராஜ்கபூர், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, சுப்பிரமணிய சிவா, சரவணஷக்தி, அர்ஜூனன், கோவை பாபு, ஜார்ஜ் விஜய், வினோத் சாகர், ரவி வெங்கட்ராமன், சலீமா உள்ளிட்ட மேலும் பலரும் நடித்துள்ளனர்.
மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள் கடைசியாக இந்த திரைப்படத்திற்காக “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு..” என்ற பாடலை பாடியிருக்கிறார். அரசியல் பிண்ண்ணி கொண்ட இந்த படத்தில் படப்பிடிப்பு முடிக்கப்பட்டு, இறுதிக்கட்ட பணிகள் தற்போது முழுவேகத்துடன் நடந்து வருவதாகவும், ”நாற்காலி” யை வரும் மார்ச் மாதம் திரையரங்கில் வெளியிட இருப்பதாகவும் படக்குழுவினர் திட்டமிட்டிருக்கிறார்கள்.