இலங்கையில் அடுத்து வரும் ஆறு மாத காலத்துக்குள் அனைத்து இலங்கையர்களும் பெரும் தியாகங்களைச் செய்ய வேண்டும் என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கூறியுள்ளார் . நேற்று நடை பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பவித்ரா வன்னியாராச்சி இந்த விஷயத்தை குறிப்பிட்டார். மேலும் ஒரு வளமான நாட்டைக் கட்டியெழுப்ப அனைத்து இலங்கையர்களும் பெரும் தியாகங்களைச் செய்ய வேண்டும் என்று சுகாதார அமைச்சர் தெரிவித்தார். இதில் கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்க சரியான சுகாதார வழிமுறைகளை பின்பற்றி அரசாங்கத்தின் கொரோனா கட்டுப்பாட்டுத் திட்டத்திற்கு ஆதரவளிக்குமாறும் மக்களிடம் அறிவுறுத்திக் கொண்டுள்ளார்.
