12-வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் 6 நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 38 அணிகள் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன. நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற ஆட்டத்தில் பெங்கால் – ஜார்கண்ட் அணிகள் மோதியது. முதலில் ஆடிய பெங்கால் 6 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய ஜார்கண்ட் அணி 9 விக்கெட்டுக்கு 145 ரன்கள் எடுத்து அடங்கி 2-வது தோல்வியை சந்தித்தது.
